Thursday, May 12, 2011

ஜெயிக்க போவது யாரு..............

நாளை (13-5-2011) தமிழகத்திற்கு முக்கிய நாள்.   
அடுத்த ஐந்து வருட தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள்……. 
     
அதிக சதவீதம் வாக்கு பதிவு, முன்பு எப்போதும் இல்லாத அளவு 
தேர்தல் கமிஷனின் கட்டுபாடுகள், செய்த சாதனைகளை நம்பாமல் வைட்டமின் ‘ப’ வை நம்பும் அரசியல் கட்சிகள் என்று ஒரு வழியாக தேர்தல் திருவிழா* முடிந்ததோடு அவரவர் நிலைக்கேற்ப கவலைகளையும் தந்து சென்று உள்ளது. 

Saturday, May 7, 2011

அட்சய திருதி --- கற்க வேண்டிய பாடங்கள்


அக்ஷயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் கூறப்படும் பொருள் ‘’எப்போதும் குறையாதது’’. அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது.

இதற்கு உண்மையான அர்த்தம் என்ன வென்றால் இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தா ருமங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பது தான்.  ஆனா நாட்டுல நடக்குற கூத்து என்ன??

நேத்து நம்ம மக்கள் வாங்கி குவிச்ச தங்கம் எவ்வளவுன்னு பாருங்க !!

Sunday, May 1, 2011

சாய் பாபாவின் சேவைகள்

இம்முறை சாய் பாபா வை பற்றி பதிவு போடலாம் என்று நினைத்து வலைப்பக்கங்களில் உலா வந்த போது ஏற்கனவே அவரை பற்றி பலரும் பதிவிட்டு இருந்ததை படிக்க நேர்ந்தது. எல்வாற்றையும் படித்து விட்டு பதிவு போடுவதற்கு தான் சற்று நேரம் ஆகிவிட்டது.

பதிவு செய்தவர்களிடையே இரண்டு விதமான அபிப்ராயங்களை இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.ஒரு சாரார் அவரை தெய்வமாக வணங்குபவர்கள்.இன்னொரு பிரிவை சேர்ந்தவர்கள் அவரை வெறும் மேஜிக் நிபுணர்,சித்து விளையாட்டுகாரர்,போலி சாமியார் என்று சொல்லியிருப்போர்.

இந்த பதிவின் நோக்கம் அவர் இறைவனுடைய அவதாராமா இல்லையா என்பதைப் பற்றியோ அவரைச் சார்ந்த சர்ச்சைகளைப் பற்றியோ விவாதிப்பதன்று.மாறாக இதுவரை அவர் செய்த சேவைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதே ஆகும்.

Saturday, April 23, 2011

புத்தகங்கள் என் நண்பேண்டா


வாசக நண்பர்களே இன்று சர்வதேச புத்தக தினம். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவ்வகையில் எனக்கும் உண்டு.
வாழ்வில் சோர்ந்திருக்கும் சில சந்தர்பங்களில் என்னை எனக்கு அறிமுகபடுத்தியதே அந்த நண்பர்கள் தான். ஆம் நான் புத்தகங்களை தான் சொல்கிறேன். இதோ மார்க் ட்வெயின் என்ற அறிஞர் சொல்வதை கேளுங்கள்
‘’நல்ல நண்பர்கள், நல்ல புத்தங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை” 
நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் அறிவுப் புதையல்கள், நம் நம்பிக்கை மாளிகையின் கதவுகள்.

அவை நம்மை சாதிக்கத் தூண்டும் கிரியா ஊக்கிகள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தகவாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப் படுத்தியுள்ளான் பேரறிஞர் தாமஸ் ஜெஅபர்சன்.(Thomas Jefferson)

Saturday, April 16, 2011

தெரிந்து கொண்டேன், பகிர்ந்து கொண்டேன் -1 (ரஜினியின் சாகசங்களும் …… உடான்ஸ் கற்பனைகளும்……..)


நண்பர்களே, இன்றைய தெரிந்து கொண்டேன், பகிர்ந்து
கொண்டேன் (சுருக்கமாக தெ.கொ, ப.கொ ) பகுதியில் 
ரஜினியைப் பற்றித்தான். அவரைப் பற்றி அவ்வப்போது 
பரபரப்பாக செய்திகள் ஏதாவது வந்து கொண்டுதான் 
இருக்கின்றன. நமக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் 
என்ற ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.

காமடி கலந்த அவரது ஹுரோயிஸத்தை நம்மில் ரசிக்காதவர் யார்?
Newer Posts Older Posts
Home